பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை - முக்கிய தீவிரவாதியும் என்கவுன்ட்டரில் பலி

காஷ்மீரில் லக்‌ஷர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய தீவிரவாதி உள்பட 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்று உள்ளனர்.
பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை - முக்கிய தீவிரவாதியும் என்கவுன்ட்டரில் பலி
x
காஷ்மீரில் லக்‌ஷர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய தீவிரவாதி உள்பட 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்று உள்ளனர்.

காஷ்மீரின் பரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபோர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரும் போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கன்ட் பரத் பகுதியில் தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில், 3 தீவிரவாதிகளை பாதுக்காப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இந்நிலையில், என்கவுன்ட்டர் செய்யப்பட்ட தீவிரவாதிகளில், ஒருவர் லக்‌ஷர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்த முடாஷிர் பண்டிட் என்றும், சமீபத்தில் அங்கு போலீசார் உள்பட 7 பேரை கொன்றதில் அவர் தொடர்புடையவர் என்றும் காஷ்மீர் ஐஜிபி விஜய் குமார் கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்