சாதாரண மக்கள் வலைதளத்தை பயன்படுத்த வேண்டும் - தகவல் தொழில் நுட்பத்துறையில் புதிய விதிகள்
சமூக ஊடகங்களை சாதாரண மக்கள் பயன்படுத்தும் வகையில், புதிய தகவல் தொழில் நுட்ப விதிகள் கொண்டு வந்துள்ளதாக, ஐ.நா.வுக்கு இந்தியா பதிலளித்துள்ளது.
புதிய டிஜிட்டல் விதிகளை கடைபிடிப்பதில் மத்திய அரசு, டுவிட்டர் நிறுவனம் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.இந்த விவகாரம் உலகம் முழுவது எதிரொலித்த நிலையில், இது தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் ஐ.நாவிற்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், 2021-ம் ஆண்டில், தகவல் தொழில் நுட்பத்தில் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது, இந்தியாவில் வாழும் சாதாரண மக்கள், சமூகவலைதளங்களை எளிதாக பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக, கூறப்பட்டுள்ளது.
Next Story