கண்டறியப்பட்டது பச்சை பூஞ்சை நோய் - பஞ்சாப்பில் ஒருவருக்கு பாதிப்பு

கொரோனா தொற்றை தொடர்ந்து கருப்பு பூஞ்சை அச்சுறுத்தி வந்த நிலையில், தற்போது பச்சை பூஞ்சை பாதிப்பையும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்
கண்டறியப்பட்டது பச்சை பூஞ்சை நோய் - பஞ்சாப்பில் ஒருவருக்கு பாதிப்பு
x
கொரோனா தொற்றை தொடர்ந்து கருப்பு பூஞ்சை அச்சுறுத்தி வந்த நிலையில், தற்போது பச்சை பூஞ்சை பாதிப்பையும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 62 வயது நபருக்கு, முதன்முதலாக அஸ்பெர்ஜிலாசிஸ் எனப்படும் இந்த பச்சை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை உறுதி செய்துள்ள மருத்துவர்கள், முதலில் அவருக்கு காசநோய் இருக்கலாம் என கருதியதாக கூறியுள்ளனர். மேலும், தற்போது பச்சை பூஞ்சை அடுத்த கவலையளிக்ககூடிய நோயாக மாறியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்