காதலிக்க மறுத்த பெண் கொடூர கொலை... கழுத்தறுத்து கொலை செய்த இளைஞன்

ஆந்திராவில் காதலிக்க மறுத்த பெண்ணை கொடூரமாக கொலை செய்த இளைஞரை, கிராம மக்களே பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
காதலிக்க மறுத்த பெண் கொடூர கொலை... கழுத்தறுத்து கொலை செய்த இளைஞன்
x
காதலிக்க மறுத்த பெண் கொடூர கொலை... கழுத்தறுத்து கொலை செய்த இளைஞன்  

ஆந்திராவில் காதலிக்க மறுத்த பெண்ணை கொடூரமாக கொலை செய்த இளைஞரை, கிராம மக்களே பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் சென்னூர்ராஜு பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சரண். இவர் சிந்தலசெரு கிராமத்தை சேர்ந்த சிரிஷா என்ற பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண் இவரின் காதலை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சரண், சிரிஷாவை தனியாக பேச அழைத்துள்ளார். அப்போது தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த பெண்ணின் கழுத்தை அறுத்து  கொடூரமாக கொலை செய்தார். பின்னர் தப்பி ஓட முயன்ற அவரை, கிராம மக்களே பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்