ஆயிஷா சுல்தானாவுக்கு ஆதரவாக லட்சத்தீவு பாஜகவினர் கூண்டோடு ராஜினாமா

லட்சத்தீவில் மதுவுக்கு அனுமதியும், மாட்டிறைச்சிக்கு தடையும் கொண்டுவரவுள்ளதை எதிர்த்து கருத்துக் கூறிய ஆயிஷா சுல்தானாவுக்கு ஆதரவாக பாஜகவினர் 15 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.
ஆயிஷா சுல்தானாவுக்கு ஆதரவாக லட்சத்தீவு பாஜகவினர் கூண்டோடு ராஜினாமா
x
லட்சத்தீவில், சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக மதுவுக்கு அனுமதியும், மாட்டிறைச்சிக்கு தடையும் கொண்டுவர உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த கேரள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திரைப்பிரபலமான ஆயிஷா சுல்தானா, லட்சத்தீவில், கொரோனாவை உயிரி ஆயுதமாக பாஜக பயன்படுத்துகிறது என்பது உள்ளிட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதைக் கண்டித்து லட்சத்தீவு பாஜக தலைவர் அளித்த புகாரின் பேரில், ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர். அவருக்கு ஆதரவாக அங்குள்ள பாஜகவினர் 15 பேர், கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்