மூத்த தம்பதியர் வெட்டிக் கொலை - முகமூடி அணிந்து வந்த கும்பல் வெறிச்செயல்
கேரளாவில் வயதான தம்பதியரை முகமூடி அணிந்த கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்குட்பட்ட நெல்லியாம்பதி பகுதியை சேர்ந்தவர் கேசவன். ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் மனைவி பத்மாவதியுடன் வசித்து வந்தார். இரவில் இவர்கள் தூங்கச் சென்ற போது திடீரென வந்த கும்பல், இருவரையும் சரமாரியாக வெட்டிச் சாய்த்தது. சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 2 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 2 பேருமே அடுத்தடுத்து பலியாகினர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் நகை, பணத்துக்காக நடந்த கொலையா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story