கொரோனா தடுப்பூசி உற்பத்தி ஆலை.. ஆலை அமைக்கும் பணி - குழு நியமனம்

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள், தடுப்பூசி நேரடி கொள்முதலுக்கான டெண்டர் முயற்சியில் இறங்கி உள்ளன.
கொரோனா தடுப்பூசி உற்பத்தி ஆலை.. ஆலை அமைக்கும் பணி - குழு நியமனம்
x
கொரோனா தடுப்பூசி உற்பத்தி ஆலை.. ஆலை அமைக்கும் பணி - குழு நியமனம்
 
கேரள மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி ஆலையை அமைக்க, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ள நிலையில், பொதுமக்களிடையே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இருப்பினும், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்க முடியாமல் மாநில அரசுகள் திணறுகின்றன. இதற்கிடையே, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள், தடுப்பூசி நேரடி கொள்முதலுக்கான டெண்டர் முயற்சியில் இறங்கி உள்ளன. இந்த சூழலில், கேரள அரசு கொரோனா தடுப்பூசி ஆலையை, மாநிலத்தில் அமைக்க முடிவு செய்துள்ளது. திருவனந்தபுரம் மாவட்டம் தோனைக்கல் பகுதியில் உள்ள உயிரி அறிவியல் பூங்காவில் தடுப்பூசி தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை கண்காணிக்க சித்ரா என்ற ஐ.ஏஸ்.எஸ்.அதிகாரி தலைமையில், குழு ஒன்றை அம்மாநில அரசு அமைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்