இந்தியாவில் தினசரி தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கொரோனாவுக்கு 6,148 பேர் பலி

இந்தியாவில் தினசரி தொற்று குறைந்து வரும் நிலையில், நேற்று 6 ஆயிரத்து 148 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் தினசரி தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கொரோனாவுக்கு 6,148 பேர் பலி
x


இந்தியாவில் தினசரி தொற்று குறைந்து வரும் நிலையில், நேற்று 6 ஆயிரத்து 148 பேர் உயிரிழந்துள்ளனர். 

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, நேற்று 94 ஆயிரத்து 052 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 91 லட்சத்து 83ஆயிரத்து 121ஆக  உயர்ந்துள்ளது.

6 ஆயிரத்து  148 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த இறப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்து 59 ஆயிரத்து 676 ஆக அதிகரித்துள்ளது. 

நேற்று ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 367 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த நிலையில், 11 லட்சத்து 67ஆயிரத்து 952 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

இதுவரை 24 புள்ளி 27 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.




Next Story

மேலும் செய்திகள்