ஊரடங்கால் ரயில் பயணிகள் வருகை குறைவு - ஜன சதாப்தி உள்ளிட்ட நான்கு ரயில்கள் ரத்து

கேரளாவில் ஊரடங்கால் ரயில் பயணிகள் வருகை குறைந்ததால், ஜன சதாப்தி உள்ளிட்ட நான்கு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
ஊரடங்கால் ரயில் பயணிகள் வருகை குறைவு - ஜன சதாப்தி உள்ளிட்ட நான்கு ரயில்கள் ரத்து
x
 கேரளாவில் ஊரடங்கால் ரயில் பயணிகள் வருகை  குறைந்ததால், ஜன சதாப்தி உள்ளிட்ட நான்கு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.ரத்து செய்யப்பட்ட சில ரயில்களின் தேதிகளும் நீட்டிக்கப்பட்டுள்ளன.  கோழிக்கோடு ஜன சதாப்தி சிறப்பு மற்றும் எர்ணாகுளம்-கண்ணூர்-எர்ணாகுளம் இன்டர்சிட்டி ரயில்கள், ஜூன் 1 முதல் 15 வரை ரத்து செய்யப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. குருவாயூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஜூன் 1 முதல் ரத்து செய்யப்படும் என்றும், மங்களூர்-டூ- மலபார் ஸ்பெஷல்,ஜூன் 1 முதல் 15 வரை ரத்து என தெரிவிக்கப்பட்டுள்ளது. மங்களூர் -டூ -கண்ணூர் ஜனசதாப்தி ஸ்பெஷல் 2 முதல் 14-ம் தேதி வரையும்,  ஜூன் 1 முதல் 15 வரை சென்னை-ஆலப்புழா தினசரி சிறப்பு ரயில் மற்றும் 2 முதல் 16 வரையிலான ஆலப்புழா-சென்னை சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்