நீரில் மூழ்கி 3 இளைஞர்கள் பலி - திருமண போட்டோஷூட்டில் பரிதாபம்

ஆந்திராவில் திருமண போட்டோஷூட் எடுக்க சென்ற போது 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
x
ஆந்திராவில் திருமண போட்டோஷூட் எடுக்க சென்ற போது 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள கும்பேட்டா பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவருக்கு சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக மலைப்பகுதியில் உள்ள அருவியில் நின்றபடி போட்டோஷூட் எடுக்க விரும்பவே, அதற்காக நண்பர்கள் நிரஞ்சன் மற்றும் குமார் ஆகியோருடன் சென்றுள்ளார். பாறையின் நடுவே இறங்கி தண்ணீருக்குள் இருந்தவாறு போட்டோ எடுத்துக் கொண்டிருந்த போது 2 பேர் திடீரென வழுக்கி விழவே, காப்பாற்ற முயன்ற மற்றொருவரும் நீரில் மூழ்கினார். பாறையின் இடுக்கில் மாட்டிக் கொண்ட 3 பேரும் வெளியேற முடியாமல் மூழ்கி உயிரிழந்தனர். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனே தகவல் சொல்லவே தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால் சடலங்களானது பாறையின் நடுவே மாட்டிக் கொண்டிருப்பதால் அதனை மீட்கும் முயற்சியானது நடைபெற்று வருகிறது. சில நாட்களில் திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகன் உட்பட 3 பேர் பலியான சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்