"ஊரடங்கால் 50% தொற்று குறைந்துள்ளது" - ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தகவல்
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கால், புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று 50 சதவீதம் குறைந்துள்ளதாக, துணைநிலை ஆளுநர் தமிழிசைசவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கால், புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று 50 சதவீதம் குறைந்துள்ளதாக, துணைநிலை ஆளுநர் தமிழிசைசவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். கோரிமேட்டில் உள்ள அரசு மருந்தகத்தில், மத்திய அரசு வழங்கிய 7 வெண்டிலேட்டர்களை பெற்று, சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் அவர் வழங்கினார். பின்னர்,
செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரியில் 350 வெண்டிலெட்டர்களும்,ஆயிரத்து 800 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளதாக தெரிவித்தார். புதுச்சேரியில், தினந்தோறும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக தமிழிசை கூறினார்.
Next Story