கொரோனாவுக்கு 1,017 மருத்துவர்கள் பலி - தமிழகத்தில் 2-ம் கட்டத்தில் 11 பேர் பலி

நாடு முழுவதும் கொரோனாவுக்கு இதுவரை 1,017 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு 1,017 மருத்துவர்கள் பலி - தமிழகத்தில் 2-ம் கட்டத்தில் 11 பேர் பலி
x
நாடு முழுவதும் கொரோனாவுக்கு இதுவரை 1,017 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா பல்வேறு அலைகளாக உலகம் முழுவதும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இந்த பேரிடர் காலத்தில் கொரோனா தொற்று பாதித்த  நோயாளிகளை குணப்படுத்தி, சிகிச்சை அளித்து வரும் முன்கள பணியாளர்களாக உள்ள மருத்துவர்களையும் அதுவிட்டு வைக்கவில்லை. இந்திய மருத்துவ சங்கத் தரவுகளின் படி, நாடுமுழுவதும் கொரோனாவுக்கு இதுவரை 1,017 மருத்துவர்கள் பலியாகியுள்ளனர். மேலும், கொரோனா முதல் அலையில் மட்டும் 748 மருத்துவர்கள் பலியானதாக அந்த தரவுகள் தெரிவிக்கிறது. தற்போது இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், இதுவரை 269 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில், தமிழகத்தில் மட்டும் 11 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக பீகாரில் 78 மருத்துவர்களும், உத்தரப் பிரதேசத்தில் 37 மருத்துவர்களும், டெல்லியில்  28 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர். இதேபோல,ஆந்திரத்தில் 22 மருத்துவர்களும், தெலங்கானாவில் 19 மருத்துவர்களும்,  மகாராஷ்டிரத்தில் 14 மருத்துவர்களும் கொரோனா தாக்கி உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு எதிராக தங்கள் உயிர்களை பணயம் வைத்து போராடி உயிர் துறக்கும் இந்த வெள்ளுடை வேந்தர்களின் மரணத்தை வரலாறு வீர மரணமாக தனது பக்கங்களில் பதிவு செய்யவேண்டும் என்பதே நமது எண்ணமாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்