டவ் தே புயல் தாக்கத்தால் கனமழை - மரங்கள், மின்கம்பங்கள் சேதம்

டவ் தே புயலால் கேரளாவின் கடலோர மாவட்டங்களில் சூறை காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
டவ் தே புயல் தாக்கத்தால் கனமழை - மரங்கள், மின்கம்பங்கள் சேதம்
x
டவ் தே புயலால் கேரளாவின் கடலோர மாவட்டங்களில் சூறை காற்றுடன் கனமழை பெய்து  வருகிறது,. இதனால் ஆலப்புழா மாவட்டத்தில் குட்டநாடு, அம்பலபுழா,மராரிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது,. சாலைகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ள நிலையில், அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மைக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்,. மேலும் அறுந்து விழுந்த மின் இணைப்புக்களை சரி செய்யும் பணியில் மின்சாரத்துறை ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்