குஜராத்தில் கரையைக் கடக்கும் டவ்-தே புயல்; சீற்றத்துடன் காணப்படும் கடல்
அரபிக்கடலில் அதி தீவிர சூறாவளிப் புயலாக நிலை கொண்டுள்ள டவ்-தே புயல், குஜராத்தில் கரையைக் கடக்க உள்ள நிலையில், மகாராஸ்டிர மாநிலம் மும்பையில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது.
அரபிக்கடலில் அதி தீவிர சூறாவளிப் புயலாக நிலை கொண்டுள்ள டவ்-தே புயல், குஜராத்தில் கரையைக் கடக்க உள்ள நிலையில், மகாராஸ்டிர மாநிலம் மும்பையில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. சூறைக்காற்றுடன் சேர்ந்து அங்கு பலத்த மழையும் பெய்து வருகிறது. மகாராஸ்டிர கடற்பகுதி வாயிலாக புயல் பயணிக்க உள்ள நிலையில், மும்பையின் சில பகுதிகளில், காற்றின் வேகத்தால் மரங்கள் சாலையில் முறிந்து விழுந்தன. இதேபோல், புயல் காரணமாக, கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
Next Story