தீவிரமடையும் டவ்தே புயல் - 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

டவ் தே புயல் காரணமாக, கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தீவிரமடையும் டவ்தே புயல் - 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
x
டவ் தே புயல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், கேரளாவில்  பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலத்த காற்று வீசியதால், குமுளி - மூணாறு செல்லும் வழியில் மரம் முறிந்து கார் மீது  விழுந்ததில், ஒருவர் உயிரிழந்தார். இதனிடையே, கோழிக்கோடு, கண்ணூர், மலப்புரம் உள்பட 11 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வயநாட்டில் உள்ல ஆறுகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால், ஆறுகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என, பேரிடர் மேலாண்மை குழு கேட்டுக்கொண்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்