கொரோனா சடலங்களை தகனம் செய்ய ஆந்திர மாநில அரசு ரூ.15 ஆயிரம் நிதியுதவி

ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்காக 15 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா சடலங்களை தகனம் செய்ய ஆந்திர மாநில அரசு ரூ.15 ஆயிரம் நிதியுதவி
x
ஆந்திராவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது,. தகனம் செய்வதற்கு பணம் இல்லாமல் பலரும் உடல்களை மருத்துவமனையிலேயே விட்டுச் செல்லும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது,.  இதன் காரணமாக கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்காக 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்,. அத்தொகை மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் மூலமாக வழங்கப்படும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்