இந்தியாவில் புதிதாக 3.11 லட்சம் பேருக்கு கொரோனா; 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி

இந்தியாவில் புதிதாக 3.11 லட்சம் பேர் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
x
இந்தியாவில் புதிதாக 3.11 லட்சம் பேர் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 24 மணி நேரங்களில் நாடு முழுவதும்  3 லட்சத்து 11 ஆயிரத்து 170 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்  என்றும் 4 ஆயிரத்து 77 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 70 ஆயிரத்து 284 ஆக அதிகரித்து உள்ளது. நாடு முழுவதும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த 3 லட்சத்து 62 ஆயிரத்து 437 பேர் குணம் அடைந்து உள்ளனர் என்றும் 36 லட்சத்து 18 ஆயிரத்து 458 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.நாட்டில் இதுவரையில் மொத்தம் 18 கோடியே 22 லட்சத்து 20 ஆயிரத்து 164 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்