மேற்கு கடற்கரையை நோக்கி முன்னேறும் டவ்-தே; விமான நிலையங்கள் ஆணையம் கண்காணிப்பு

நாட்டின் மேற்கு கடற்கரையை நோக்கி டவ்தே புயல் முன்னேறி வரும் நிலையில், நிலைமையை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு கடற்கரையை நோக்கி முன்னேறும் டவ்-தே; விமான நிலையங்கள் ஆணையம் கண்காணிப்பு
x
நாட்டின் மேற்கு கடற்கரையை நோக்கி டவ்தே புயல் முன்னேறி வரும் நிலையில், நிலைமையை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் அடிப்படையில், மேற்கு கடற்கரைப் பகுதியில் இருக்கும் விமான நிலையங்களின் தயார்நிலையை இந்திய விமான நிலையங்களின் ஆணையம் ஆய்வு செய்ததை அடுத்து, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, காலை 10 மணி வரை லட்சத்தீவுகளுக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்