ஏர் இந்தியா எஸ்ஏடி வழக்கு; ஸ்வப்னா சுரேஷ் கைது குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்
ஏர் இந்தியா எஸ்ஏடி வழக்கு; ஸ்வப்னா சுரேஷ் கைது குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
x
ஏர் இந்தியா எஸ்ஏடி வழக்கு தொடர்பாக திருவனந்தபுரம் சிறையில் இருந்த ஸ்வப்னா சுரேஷ் குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்வப்னா சுரேஷை 10 நாட்கள் காவலில் வைக்கக் கோரி  திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் போலீசார் தரப்பில் விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது,. ஏர் இந்தியா அதிகாரி எல்.எஸ். சிபு மற்றும் முன்னாள் ஏர் இந்தியா சாட்ஸ் துணைத் தலைவர் பினாய் ஜேக்கப் ஆகியோர் மீது  பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை ஸ்வப்னா சுரேஷ் முன்வைத்திருந்தார்,. இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷின் உடல்நிலையை உறுதிப்படுத்துமாறு அவரது தாயார் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Next Story

மேலும் செய்திகள்