ஓய்வுபெற்ற ராணுவ மருத்துவ அதிகாரிகளுக்கு பணி - பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு

கொரோனா பணிகளுக்காக 400 ஓய்வு பெற்ற ராணுவ மருத்துவ அதிகாரிகளை நியமிக்க பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஓய்வுபெற்ற ராணுவ மருத்துவ அதிகாரிகளுக்கு பணி - பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு
x
ஓய்வுபெற்ற ராணுவ மருத்துவ அதிகாரிகளுக்கு பணி - பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு 

கொரோனா பணிகளுக்காக 400 ஓய்வு பெற்ற ராணுவ மருத்துவ அதிகாரிகளை நியமிக்க பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.கொரோனா 2-வது அலையால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தடுப்பூசிகள், ஆக்கிஜன், படுக்கைகள் இல்லாமல் தடுமாறி வருகின்றன.இந்நிலையில், கொரோனா தொடர்பான பணிகளுக்காக, ராணுவ மருத்துவப் பிரிவு மற்றும் குறுகிய கால சேவை ஆணையத்தின் 400 ஓய்வு பெற்ற மருத்துவ அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்குமாறு ஆயுதப்படை மருத்துவ சேவைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சகம் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்