"ஊரடங்கில் இரக்கத்துடன் செயல்படுங்கள்" - பிரதமருக்கு, ராகுல்காந்தி வேண்டுகோள்
கொரோனா ஊரடங்கு போது அரசாங்கம் இரக்கத்துடன் செயல்பட வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
கொரோனா ஊரடங்கு போது அரசாங்கம் இரக்கத்துடன் செயல்பட வேண்டும் என்றும், தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், எங்கள் ஆதரவு எப்போதும் அரசுக்கு உண்டு என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கொரோனா சுனாமி தொடர்ந்து, நம் நாட்டை அழித்துக் கொண்டிருப்பதால் மீண்டும் ஒரு முறை உங்களுக்கு கடிதம் எழுத நிர்பந்திக்கப்படுகிறேன் என பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தொற்று மற்றும் அதன் பிறழ்வுகளை விஞ்ஞான ரீதியாக மரபணு முறை மற்றும் அதன் நோய் முறைகளைப் பயன்படுத்தி கண்காணிக்கவும், அனைத்து மக்களுக்கும் விரைவாக தடுப்பூசி போடுங்கள் என்றும் ராகுல்காந்தி தமது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.
Next Story