கேரளாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு - பாதிப்பு எண்ணிக்கை 17,43,923 ஆக உயர்வு

கேரளாவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 565 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு - பாதிப்பு எண்ணிக்கை 17,43,923 ஆக உயர்வு
x
கேரளாவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 565 ஆக உயர்ந்துள்ளது.  கேரளாவில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலவரத்தை கேரள முதல்வர்  பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார். அப்போது அவர்  கூறுகையில், ஒரே நாளில் 41 ஆயிரத்து 953 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்றார். இதனால், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17 லட்சத்து 43 ஆயிரத்து 923 ஆக உயர்ந்துள்ளதாக கூறினார். இதுவரை கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 565 ஆக உயர்ந்துள்ளதாகவும், சிகிச்சையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளதாகவும் கூறினார். பிரிட்டனில் இருந்து கேரளாவிற்கு திரும்பியவர்களில் இதுவரை 11 பேர் புதியவகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பினராயி விஜயன் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்