நாளை முதல் கேரளாவில் கடும் கட்டுப்பாடுகள்

கேரளாவில் கொரோனா பரவலை தடுத்திட, நாளை முதல் மாநிலத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நாளை முதல் கேரளாவில் கடும் கட்டுப்பாடுகள்
x
கேரளாவில் கொரோனா பரவலை தடுத்திட, நாளை முதல் மாநிலத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
அத்தியாவசிய சேவைகள், தவிர அனைத்து நடவடிக்கைகளிலும் கடும் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றார்.  மாநில, மத்திய அரசு நிறுவனங்கள், அதன் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனங்கள், அத்தியாவசிய சேவை பிரிவுகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மட்டும் அலுவலகத்தில் பணிபுரிவார்கள் என தெரிவித்துள்ளார்.  அவசியமான ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும், அத்தியாவசிய சேவை தொடர்பாக பணிபுரியும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் 24 மணி நேரமும் பணியாற்றலாம் என்றும் தெரிவித்தார்.  ஆக்சிஜன் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சுகாதாரம் துறையில் பணிபுரிபவர்கள் நிறுவனத்தின் அடையாள ஆவணத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என கூறினார். தொலைத் தொடர்பு சேவை, உள்கட்டமைப்பு, இணைய சேவை வழங்குபவர்கள், பெட்ரோல், எல்பிஜி அத்தியாவசிய சேவை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  நோயாளிகளும் அவர்களது தோழர்களும் அவசரகாலத்தில் பயணம் செய்யலாம் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். (Gfx in 7 ) அனைத்து நிறுவனங்களிலும் பணியாளர்கள் மற்றும் முதலாளிகள் இரட்டை முக கவசம் அணிய வேண்டும் என்றும், கடைகள், உணவகங்கள் இரவு 9 மணிக்கு முன் மூடப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். (Gfx in 8 ) திருமணத்தில் அதிக பட்சம் 50 பேரும், இறுதி சடங்கில், அதிகபட்சம் 20 பேரும் கலந்து கொள்ளலாம் என கூறினார். (Gfx in 9 ) அனைத்து வகையான திரைப்பட-சீரியல் படப்பிடிப்பும் நிறுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்