கொரோனாவுக்கு முன்னாள் அட்டர்னி ஜெனரலாக பதவிவகித்த சோலிசோரப்ஜி காலமானார்
கொரோனாவுக்கு 91 வயதான முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சோரப்ஜி காலமானார்
சட்ட வல்லுநராக தனது தனி திறமையை நிரூபித்த சோரப்ஜி, கடந்த 1930 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். உச்ச நீதிமன்றத்தின் மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்ட அவர், கடந்த 1989 ஆம் ஆண்டு அட்டர்னி ஜெனராலாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து ஐநாவில் மனித உரிமை வழக்கறிஞராக பணியாற்றிய அவர், ஐநா உலக நீதிமன்றத்தில் உறுப்பினராகவும் இருந்தார். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Next Story