"ஊரடங்கை அமல்படுத்த மாட்டோம்" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதி

கேரள மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்த மாட்டோம் என்றும், தாங்களாக சுய ஊரடங்கை பின்பற்ற வேண்டும் என மக்களுக்கு கேரள முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஊரடங்கை அமல்படுத்த மாட்டோம் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதி
x
 இதுதொடர்பாக பதிவிட்டுள்ள பினராயி விஜயன், கேரள அரசு மக்களிடம் ஊரடங்கை திணிக்காது என தெரிவித்துள்ளார்.  மக்களுக்கு தங்களை பாதுகாக்கும் விழிப்புணர்வு உள்ளதாக அரசு நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  மேலும், கூட்டம் சேர்வது , உள் அரங்கங்கள்ல கூடுவது, நெருக்கமான தொடர்பு ஆகிய மூன்றையும் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.  பயணங்களையும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் ஒத்தி வைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்துவதில்  எந்த மருத்துவமனையாவது  பாரபட்சமாக செயல்படுவதாக தெரிவந்தால்  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பினராயி விஜயன் எச்சரித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்