மருந்து தயாரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து - போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்
மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி பகுதியில் இயங்கும் தனியார் மருந்து தயாரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி பகுதியில் இயங்கும் தனியார் மருந்து தயாரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஆலையில் திடீரென ஏற்பட்ட தீ, மளமளவென பரவியது. இதனைத் தொடர்ந்து, அங்கு பணியாற்றிய ஊழியர்கள், அலறியடித்து வெளியே ஓடினர். தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்த நிலையில், அந்தப் பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த விபத்தில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Next Story