கொரோனா பாதிப்பு புதிய உச்சம் - ஒரே நாளில் 3,293 பேர் உயிரிழப்

கொரோனா பாதிப்பு புதிய உச்சம் - ஒரே நாளில் 3,293 பேர் உயிரிழப்
கொரோனா பாதிப்பு புதிய உச்சம் - ஒரே நாளில் 3,293 பேர் உயிரிழப்
x
இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.  
 
நாடு முழுவதும் புதிதாக 3 லட்சத்து 60 ஆயிரத்து 960 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 3 ஆயிரத்து 293 பேர் உயிரிழந்துள்ளனர்

இதனால் இந்தியாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2 லட்சத்து ஆயிரத்து187 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 162 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர் என்றும்

29 லட்சத்து 78 ஆயிரத்து 709 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 14 கோடியே 78 லட்சத்து 27 ஆயிரத்து 367 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்