கொரோனா பாதித்த மூதாட்டி பரிதாபமாக இறப்பு... மருத்துவமனையின் மீது உறவினர்கள் தாக்குதல்

கொரோனா பாதித்த மூதாட்டி பரிதாபமாக இறப்பு... மருத்துவமனையின் மீது உறவினர்கள் தாக்குதல்
கொரோனா பாதித்த மூதாட்டி பரிதாபமாக இறப்பு... மருத்துவமனையின் மீது உறவினர்கள் தாக்குதல்
x
கொரோனா பாதித்த மூதாட்டி பரிதாபமாக இறப்பு... மருத்துவமனையின் மீது உறவினர்கள் தாக்குதல் 

டெல்லியில் மருத்துவமனையில் இடம் கிடைக்காததால் கொரோனா பாதித்த மூதாட்டில் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டெல்லியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு கொரோனாவால் பாதித்த 62 வயது மூதாட்டியை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர். மிகவும் தீவிர தொற்று பாதிப்புக்கு ஆளான மூதாட்டிக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்ட நிலையில், மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் படுக்கை இல்லாததால் மூதாட்டிக்கு சிகிச்சை மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  இதற்கிடையே ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், மருத்துவமனையின் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு மருத்துவமனை ஊழியர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்