பிரதமர் மோடி - பைடன் தொலைபேசியில் பேச்சு : கொரோனா பாதிப்பு குறித்து கலந்துரையாடல்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரதமர் மோடி இருவரும் தொலைபேசி வாயிலாக உரையாடினர்.
பிரதமர் மோடி - பைடன் தொலைபேசியில் பேச்சு : கொரோனா பாதிப்பு குறித்து கலந்துரையாடல்
x
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இரு நாடுகளில் நிலவும் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து விவாதிக்க பட்டதாகவும், பெரும் தொற்று காலத்தில் இந்தியாவுக்கு, அமெரிக்கா அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து கொண்டதாவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தடுப்பூசி மூலப்பொருட்களின் தங்குதடையற்ற விநியோகத்தின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் மோடி வலியுறுத்தினார். அப்போது பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்கள், வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வழங்கி அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என உறுதி அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்