"கிராமங்களின் வளர்ச்சிக்காக பணியாற்றி வருகிறோம்"- பிரதமர் நரேந்திர மோடி
நவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு பெற்றதாக இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு பெற்றதாக இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தில், ஸ்வமித்வா திட்டத்தின் கீழ், மின்னணு சொத்து அட்டை விநியோகத்தை, பிரதமர் தொடங்கி வைத்தார்.
காணொலி காட்சி வழியாக நடைபெற்ற இந்த நிகழ்வில், 4 லட்சத்து 9 ஆயிரம் பேருக்கு மின்னணு சொத்து அட்டைகள் வழங்கப்பட்டன. இதில் பேசிய பிரதமர் மோடி,
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் கிராமப்புறங்களை சென்றடையாமல் இருக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தியதாகவும், இந்த ஆண்டு மீண்டும் இதே சவாலை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார்.
கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் தான் தடுப்பூசி திட்டம் வெற்றிபெறும் என குறிப்பிட்ட பிரதமர்,
கிராமப்புறத்தில் உள்ள மக்களும் தடுப்பூசி இரண்டு தவணைகள் பெறுவதை உறுதி செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்த பிரதமர்,
நவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு பெற்றதாகவும் அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.
Next Story