ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கியவர் கைது
டெல்லியில் ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லியில் ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றவரை போலீசார் கைது செய்துள்ளனர். தென் மேற்கு டெல்லியில் அனில் குமார் என்பவரின் வீட்டில் சோதனையிட்ட போலீசார் 32 பெரிய, 16 சிறிய ஆக்சிஜன் சிலிண்டர்களை பறிமுதல் செய்துள்ளனர். அனில் குமார் பெரிய சிலிண்டர்களில் இருந்து சிறிய சிலிண்டருக்கு ஆக்சிஜனை மாற்றி, பின்னர் ஒரு சிறிய சிலிண்டரை 12 ஆயிரத்து 500-க்கு விற்பனை செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.
Next Story