கேரளாவில் பல்கலைக்கழக தேர்வுகள் கொரோனா பரவலால் ஒத்திவைப்பு
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பால் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளையும் ஒத்தி வைக்க வேண்டும் என்று துணைவேந்தர்களுக்கு அம்மாநில ஆளுநர் ஆரிப் முகம்மது கான் உத்தரவிட்டுள்ளார்.
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பால் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளையும் ஒத்தி வைக்க வேண்டும் என்று துணைவேந்தர்களுக்கு அம்மாநில ஆளுநர் ஆரிப் முகம்மது கான் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து தேசிய அளவிலான தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. .இதே போல் கேரளாவில் தற்போது நடைபெற்று வரும் 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான பொது தேர்வை அம்மாநில அரசு ஒத்தி வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பரவலால் மாணவர்களும், பெற்றோர்களும் கவலையடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Next Story