கொடியேற்றத்துடன் துவங்கியது திருச்சூர் பூரம் விழா

கேரளாவில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவிற்கான கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கொடியேற்றத்துடன் துவங்கியது திருச்சூர் பூரம் விழா
x
கேரளாவில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவிற்கான கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கேரள மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும்  பூரம் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு இந்த திருவிழா நடத்தப்படவில்லை. இந்த ஆண்டும் இந்ததிருவிழா நடத்தப்படாது என அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் அனுமதி வழங்கப்பட்டது.  இதன்படி பூரம் திருவிழா வரும் 23 தேதி நடைபெற உள்ள நிலையில் இதற்காக கொடியேற்றம் திருவம்பாடி பரமேக்காவு பகவதி கோயில் மற்றும் திருவம்பாடி ஸ்ரீகிருஷ்ணர் கோயில்களில் நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்