"கொரோனா மருந்துகளை பதுக்கினாலோ அல்லது கள்ளச்சந்தையில் விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை" - டெல்லி முதலமைச்சர் எச்சரிக்கை

கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் மருந்துகளை பதுக்கினாலோ அல்லது கள்ளச்சந்தையில் விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.
கொரோனா மருந்துகளை பதுக்கினாலோ அல்லது கள்ளச்சந்தையில் விற்பனை செய்தாலோ கடும்  நடவடிக்கை - டெல்லி முதலமைச்சர் எச்சரிக்கை
x
டெல்லியில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் பேசிய  அரவிந்த் கெஜ்ரிவால்,  கொரோனா பரிசோதனை செய்தவர்களுக்கு, 24 மணி நேரத்திற்குள் அறிக்கை அளிக்காத ஆய்வகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். டெல்லியில் குறைந்த எண்ணிக்கையிலான ஐ.சி.யு.படுக்கை வசதிகள் மட்டுமே உள்ளதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்தார்.  மருத்துவ ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து தொடர்பாக மத்திய அரசிடம் கோரி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் மருந்துகளை பதுக்கினாலோ அல்லது கள்ளச்சந்தையில் விற்பனை செய்தாலோ அந்த நபர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என எச்சரித்துள்ளார்.   


Next Story

மேலும் செய்திகள்