"60 லட்சம் தடுப்பூசிகள் வேண்டும்" - பிரதமருக்கு ஆந்திர முதல்வர் கடிதம்

ஆந்திராவிற்கு 60 லட்சம் தடுப்பூசிகளை வழங்குமாறு பிரதமரிடம் அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் வலியுறுத்தியுள்ளார்.
60 லட்சம் தடுப்பூசிகள் வேண்டும் - பிரதமருக்கு ஆந்திர முதல்வர் கடிதம்
x
ஆந்திராவிற்கு 60 லட்சம் தடுப்பூசிகளை வழங்குமாறு பிரதமரிடம் அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 14ஆம் தேதி நாட்டிலேயே அதிகபட்சமாக 6 லட்சத்து 28 ஆயிரம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், 60 லட்சம் தடுப்பூசிகளை வழங்குமாறு கேட்டுக்கொண்ட அவர், இதனை நிறைவேற்றினால் 3 வாரத்திற்குள் 45 வயதிற்கும் மேற்பட்டோருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்படும் என உறுதி அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்