"60 லட்சம் தடுப்பூசிகள் வேண்டும்" - பிரதமருக்கு ஆந்திர முதல்வர் கடிதம்
ஆந்திராவிற்கு 60 லட்சம் தடுப்பூசிகளை வழங்குமாறு பிரதமரிடம் அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் வலியுறுத்தியுள்ளார்.
ஆந்திராவிற்கு 60 லட்சம் தடுப்பூசிகளை வழங்குமாறு பிரதமரிடம் அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 14ஆம் தேதி நாட்டிலேயே அதிகபட்சமாக 6 லட்சத்து 28 ஆயிரம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், 60 லட்சம் தடுப்பூசிகளை வழங்குமாறு கேட்டுக்கொண்ட அவர், இதனை நிறைவேற்றினால் 3 வாரத்திற்குள் 45 வயதிற்கும் மேற்பட்டோருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்படும் என உறுதி அளித்தார்.
Next Story