எடியூரப்பாவுக்கு மீண்டும் கொரோனா
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை சுகாதார துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்திய சில மணி நேரத்தில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எடியூரப்பா
ஏற்கனவே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story