கேரளாவில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை - 2-வது தடுப்பூசியை செலுத்துவதில் சிக்கல்

கேரளாவில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பல பகுதிகளில் 2-வது தடுப்பூசியை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை - 2-வது தடுப்பூசியை செலுத்துவதில் சிக்கல்
x
கேரளாவில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பல பகுதிகளில் 2-வது தடுப்பூசியை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 கேரளாவில் கொரோனா பரவலுக்கு மத்தியில் 45 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசியை போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள். மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எர்ணாகுளம், திருவனந்தபுரம் உட்பட 5 மாவட்டங்களில் கோவிஷீல்ட் மருந்து காலியாகி விட்டது. இதனால் முகாம்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதற்கிடையே மத்திய அரசு 2 லட்சம் டோஸ்களை வழங்கியுள்ளது. இந்த மருந்துகள் முகாம்களுக்கு உடனடியாக வந்து சேருமா என்ற குழப்பம் நிலவுகிறது. இதற்கிடையே  திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனைகளிலும், கிராமப்புற மருத்துவமனைகளிலும் செவ்வாய் கிழமையே தடுப்பூசிகள் காலியாகிவிட்டது. இதனால் 2-வது டோசுக்காக வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது.  

Next Story

மேலும் செய்திகள்