முன்பகையால் நடந்த கொடூர சம்பவம் - 6 மாத குழந்தையையும் விட்டு வைக்காத கும்பல்

ஆந்திர மாநிலத்தில் முன்பகை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்பகையால் நடந்த கொடூர சம்பவம் - 6 மாத குழந்தையையும் விட்டு வைக்காத கும்பல்
x
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள பெண்டூர்த்தி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமணா. இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த அப்பல ராஜு என்பவருக்கும் ஏற்கனவே முன்பகை இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அப்பல ராஜு, ரமணாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அப்பல ராஜூ தான் வைத்திருந்த அரிவாளால் ரமணா மற்றும் மருமகள் உஷா, உறவினர் அருணா, ராமர், உஷாவின் 3 வயதான குழந்தை உதய், 6 மாத குழந்தை இஷிதா ஆகியோரை கொடூரமாக வெட்டிக் கொன்றார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 6 பேரின் சடலங்களை கைப்பற்றினர். தப்பி ஓடிய அப்பல ராஜூவை  போலீசார் தேடி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை கொடூரமாக வெட்டிக் கொன்ற சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்