ரூ.1.4 கோடி தங்க, வைர நகைகள் - மதுரைக்கு கொண்டுசெல்ல முயற்சி

ஹைதராபாத்தில் இருந்து மதுரைக்கு தனியார் பேருந்தில் கடத்தி வரப்பட்ட ஒரு கோடியே 4 லட்சம் மதிப்பிலான தங்க வைர நகைகள் ஆந்திர காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ.1.4 கோடி தங்க, வைர நகைகள் - மதுரைக்கு கொண்டுசெல்ல முயற்சி
x
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள பஞ்சலிங்க சுங்கச்சாவடி அருகே, சோதனை சாவடி அமைத்து காவல்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தனியார் பேருந்து ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில், எந்த ஆவணங்களுமின்றி இரண்டு நபர்கள் தங்கம் மற்றும் வைர நகைகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் தங்க நகைகள் ஹைதராபாத்தில் இருந்து மதுரை கொண்டுசென்றதாக அந்த நபர்கள் கூறினர்.  இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனைச்சாவடியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்று கோடி தங்கம்  கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்