24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் - மத்திய சுகாதார துறை தகவல்
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்புக்கு ஆயிரத்து 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்புக்கு ஆயிரத்து 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி,
கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 372 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.
இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 38 லட்சத்து 73 ஆயிரத்து 825 ஆக உயர்ந்துள்ளது.
ஆயிரத்து 27 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த இறப்பு எண்ணிக்கை
ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 85ஆக அதிகரித்துள்ளது.
82 ஆயிரத்து 339 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த நிலையில்,
13 லட்சத்து 65 ஆயிரத்து 704 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுவரை 11 புள்ளி 11 கோடி பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
Next Story