கோயில் உண்டியல் உடைப்பு - சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை

புதுச்சேரி அருகே கோயில் உண்டியலை உடைத்து 1 லட்சம் பணத்தை கொள்ளையடித்தவர்களை சிசிடிவி கேமரா காட்சிகளைகொண்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர்
கோயில் உண்டியல் உடைப்பு - சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை
x
புதுச்சேரி அடுத்த  அரும்பார்த்தபுரம் பகுதியில் செங்கழுநீர் அம்மன் ஆலயம் உள்ளது. இந்த கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள், சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இருவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ரெட்டியார்பாலையம் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்