வாக்குச்சாவடியில் துப்பாக்கி சூடு விவகாரம் - இன அழிப்பு என மம்தா பானர்ஜி காட்டம்

வாக்குச்சாவடியில் மக்கள் நெஞ்சில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
வாக்குச்சாவடியில் துப்பாக்கி சூடு விவகாரம் - இன அழிப்பு என மம்தா பானர்ஜி காட்டம்
x
சிட்டல்குச்சி தொகுதியில் வாக்குச்சாவடியில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். சில்குரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை விடுக்க முழங்காலுக்கு கீழ் தாக்குதல் நடத்தி இருக்கலாம், ஆனால் நெஞ்சில் சுட்டுள்ளனர் எனக் கூறினார். இதனை இனப்படுகொலை எனக் குற்றம் சாட்டியிருக்கும் மம்தா பானர்ஜி, மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் தொழிலக பாதுகாப்புக்காக பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் என்றும் அவர்களுக்கு கூட்டத்தை கட்டுப்படுத்த அனுபவம் கிடையாது என்றும் கூறினார். மேலும், துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் வீடியோ அழைப்பு மூலம் பேசிய மம்தா பானர்ஜி, 14 ஆம் தேதி அவர்களை சந்திப்பதாக கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்