கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுங்கள் - பிரதமர் மோடி

கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க மாநில அரசுகள், உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுங்கள் - பிரதமர் மோடி
x
கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க மாநில அரசுகள், உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். 

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2 - வது அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை, தடுப்பது தொடர்பாக பல்வேறு மாநில, முதல்வர்களுடன் பிரதமர் மோடி  ஆலோசனை மேற்கொண்டார்.

 இந்த ஆலோசனையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் மற்றும் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 தமிழக அரசு சார்பில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை, பொதுத்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி,நோய் பரவல் அதிகமாக உள்ள இடங்களில், நுண்ணிய நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை கண்டறிந்து வகைப்படுத்த வேண்டும் என கேட்டு கொண்டார். 
கொரோனா பரவுவதை தடுக்க மீண்டும் ஒரு போரில் ஈடுபட வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.  

தற்போது முக கவசமும் போதுமான அளவுக்கு உள்ளது என்றும்​, சிறிய ஊர்களில் கூட கொரோனா தடுப்பூசி கிடைத்து வருகிறது எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 

 கொரோனா தடுப்பு விதிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும், பரிசோதனைகளை அதிகரிக்க மாநில அரசுகள், உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். இந்த கூட்டத்தில், மேற்கு வங்க முதலமைச்சர், மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக அந்த மாநில தலைமை செயலாளர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்