பூமி பூஜைக்காக பந்தல் அமைத்த போது மின்சாரம் தாக்கி 4 பேர் பலி

ஓசூர் அருகே பூமி பூஜைக்கு பந்தல் அமைத்த போது மின்சாரம் தாக்கி 4 பேர் பலியாகி உள்ளனர்.
x
கர்நாடக மாநில எல்லையில் உள்ள அத்திப்பள்ளி என்னும் ஊரில் அடுக்குமாடி கட்டடப்பணிகள் தொடங்குவதற்கு பூமி பூஜை நடத்த பந்தல் அமைக்கும் பணியில் நேற்று 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இன்று நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு நேற்று மாலை பந்தல் அமைக்கும் பணிகளில் தொழிலாளர்கள் முழு வீச்சில் ஈடுபட்டிருந்தனர்.  பந்தல் மேடைக்கு அருகில் சுற்றுச் சுவரை ஒட்டியவாறு மின்கம்பிகள் செல்வதை  கவனிக்காமல் பணி செய்ததாக கூறப்படுகிறது. இரும்ப பந்தல் மீது  மின் கம்பிகள் உரசியதில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஆகாஷ், மகாதேவ் , விசாகாந்தா, விஜய் ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 6 தொழிலாளர்கள் படுகாயங்களுடன் அத்திப்பள்ளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக பெங்களூரு புறநகர் மாவட்ட எஸ்.பி. சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகிறார் 


Next Story

மேலும் செய்திகள்