இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக ஒரே நாளில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
x
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக ஒரே நாளில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 736 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 8 லட்சத்து 43ஆயிரத்து 473 பேருக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் ஒரே நாளில் 630 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 66 ஆயிரத்து177 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 59 ஆயிரத்து 856 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்