"கொரோனா 2வது அலை மோசமடைந்துள்ளது" - மத்திய சுகாதாரத்துறை செயலாளர்

கொரோனாவின் 2வது அலை மோசமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.
கொரோனா 2வது அலை மோசமடைந்துள்ளது - மத்திய சுகாதாரத்துறை செயலாளர்
x
கொரோனா பரவல் அதிகம் உள்ள முதல் 10 மாவட்டங்களில், ஏழு மாவட்டங்கள் மகாராஷ்டிராவை சேர்ந்தவை என்றும், மற்ற மூன்றும் கர்நாடகா, சத்தீஸ்கர் மற்றும் டெல்லி மாநிலங்களை சேர்ந்தவை என்றும் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தகுதி பெற்றவர்கள் தடுப்பூசியை எடுத்து கொள்ள அறிவுறுத்தி உள்ளார். சத்தீஸ்கரில் நோய் பரவல் அதிகரித்து வருவதாக தெரிவித்த ராஜேஷ் பூஷண், ஆர்டி பி.சி.ஆர் சோதனைகளின் சதவீதத்தை அதிகரிக்க மாநில அரசுகளுக்கு பரிந்துரைத்துள்ளார். இந்நிலையில், பொது சுகாதார குழுக்கள் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், பஞ்சாப் மாவட்டங்களுக்கு சென்று உதவ உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்