மகாராஷ்டிரா, டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்திலும் ஊரடங்கு
மகாராஷ்டிரா, டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை குஜராத் மாநிலத்தின் 20 நகரங்களில் இரவு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும், பெரும் நிகழ்வுகள் ஏப்ரல் 30 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். ஏப்ரல் 30 வரை சனிக்கிழமை தோறும் அரசாங்க அலுவலகங்கள் மூடப்பட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
Next Story