8.31 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்

நாடு முழுவதும் இதுவரை 8 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
8.31 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்
x
நாடு முழுவதும் இதுவரை 8 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கொரோனா பாதிப்பு தொடர்பான மத்திய சுகாதாரத்துறையின் புள்ளி விவரங்கள் படி, இந்தியாவில் ஒரே நாளில் 96 ஆயிரத்து 982 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  

மொத்த பாதிப்பு  எண்ணிக்கை 1 கோடியே 26 லட்சத்து 86 ஆயிரத்து 49ஆக உயர்ந்துள்ளது. 

24 மணி நேரத்தில் மட்டும் 50 ஆயிரத்து 143 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 

நேற்று ஒரே நாளில் 446பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த இறப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 547ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா பாதித்த 7 லட்சத்து 88 ஆயிரத்து 223 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

இதுவரை ஒட்டு மொத்தமாக 8 கோடியே 31 லட்சத்து10 ஆயிரத்து 926 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்