ஏப்ரல் 8ஆம் தேதி பிரதமர் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை
வரும் 8ஆம் தேதி அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும், பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளார்.
மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து, பிரதமர் மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசிக்க உள்ளார்.
இதனிடையே, நாட்டில் இன்று மாலை நிலவரப்படி மொத்தம் 8 கோடிக்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Next Story