பயங்கர தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு அமித்ஷா அஞ்சலி

சத்தீஷ்கரில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி செலுத்தினர்.
பயங்கர தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு அமித்ஷா  அஞ்சலி
x
அவருடன் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் மரியாதை செலுத்தினார். மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் நிறைந்த சுக்மாவின் தரம் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற சண்டையில் கோப்ரா படையினர் உள்பட 22 பாதுகாப்பு படையினர் வீரமரணம் அடைந்தனர். ஜக்தால்பூரில் வைக்கப்பட்டிருந்த 14 படை வீரர்களின் உடலுக்கு மரியாதை செலுத்திய அமித்ஷா, சண்டை நடைபெற்ற பகுதிக்கு சென்று ஆய்வை மேற்கொள்கிறார். 

Next Story

மேலும் செய்திகள்